சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ரியாஸ் மவ்லவி அவர்கள் இன்று வபாத்தானார்கள்..!

ஜுனைட்.எம்.பஹ்த்-
ரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மவ்லவி ரியாஸ் அவர்கள் இன்று வபாத்தானதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..

கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்த நான்கு சிறு பிள்ளைகளின் தந்தையான (திருமணத்தின் பின்னர் கண்டி பிரதேசத்தில் வாசித்து வந்தவர்) இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கபட்டு உயிருக்காக போராடிக்கொண்டு இருந்த நிலையில் இவரின் சத்திர சிகிச்சைக்காக பெருந்தொகை பணம் தேவைப்படுகிரது என நாம் அறிவித்து சிலர் உதவிகளும் செய்து இருந்த வேளை இன்று கண்டி வைத்தியசாலையில் வைத்து வபாத்தாகி உள்ளார்.

அன்னாரது ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகை தொடர்ந்து 97ம் கட்ட சிராஜ் நகர் ஜும்அ பள்ளியில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்லிவாயல் னமய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு ஜன்னத்துல் பிர்தெளஸ் சுவர்க்கத்தை வழங்குவானாக.. அவரின் பிரிவால் வாடும் பிள்ளைகள் , மனைவி மற்றும் குடும்பத்தாருக்கும் அதனை தாங்கும் சக்தியை வழங்குவானாக.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -