தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்கவும் அறிவுறுத்தல் விடுப்பு..!

க.கிஷாந்தன்-
மின் உற்பத்தி நிலையங்கள் அண்மித்த பகுதிகளிலுள்ள நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் எதிர்வரும் காலங்களில் திறக்கப்படவுள்ளதால் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்துவரும் கடும் மழையால் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.

நீர்தேக்கங்களின் நீர் மட்டம் 90 வீதம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

இதனால் ஒருசில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளை திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மின்சார சபை மேலும் தெரிவிக்கின்றது.

மலையகத்தில் உள்ள பிரதான நீர்தேக்கங்களான காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை, மேல்கொத்மலை, கெனியன், லக்ஷபான, நவ லக்ஷபான, பொல்பிட்டிய போன்ற நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -