தேசிய காங்கிரஸ் மூலம் அரசியலில் அறியப்பட்டவர்கள் அதாஉல்லாவிற்கு விளக்கம் சொல்ல தகுதி அற்றவர்கள்!

அதாஉல்லா என்ற செத்த பாம்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒக்சிஜன் கொடுக்காது எனும் தலைப்பில் இணையத்தளத்தில் வெளியான செய்திக்குரிய மறுப்பு.

தேசிய  காங்கிரஸ் மூலம் அரசியலில் அறியப்பட்டவர்கள்
அதாஉல்லாவிற்கு  விளக்கம் சொல்ல தகுதி அற்றவர்கள்

பேய் வளர்த்த பிசாசு ஓன்று  கோவில் மீது ஏறி நின்று சாமியை குற்றம் சொல்லியதாம் என்பதுபோல் காலத்துக்குக் காலம் சுகபோகங்களுக்காக  கொப்புத் தாவும்  ஸ்ரீ மு காங்கிரசில் புதிதாக சேர்ந்து கொண்ட  ஒருத்தர்  அதாஉல்லாவை கொச்சைப்படுத்த முற்படுவது கண்டிக்கத் தக்கது என அக்கரைப்பற்று முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான  எஸ் எம் சபீஸ் தெரிவித்தார்

இவருடைய கருத்தான   செத்த பாம்புக்கு முஸ்லிம்  காங்கிரஸ் ஒட்சிசன் வழங்காது   எனக் கூறியிருப்பது  மேல் கூறியதற்கு ஒப்பானது ஆகும்

அதிலும் தான் என்ன கூறுகிறோம் என்பது கூட தெரியாத அளவிற்கு புத்தி பேதலித்துப் போய் இருக்கின்றது  அதாவது செத்த ஒன்றுக்கு ஒட்சிசன் வழங்க முடியுமா?

இன்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப் பதவி என்பது ஹக்கீமுக்கு அதாஉல்லாவின் சாதுரியத்தால் கிடைத்த ஒரு வரம் என்பது ஹகீமால்தான் மறுக்க முடியுமா?

மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு நாடே அழுது கொண்டிருந்த போது மரணத்தை மகிழ்வாக கருதி பட்டாசு கொளுத்தியவர்களுக்கு அக்கட்சியினைப் புகழ்வதற்கு இறைவன் கொடுத்த தண்டனையே இதுவென்று  எண்ணத் தோன்றுகிறது

அதாஉல்லாவின்  வீட்டு நுழைவாயிலில் தனது நன்றி உணர்வை அதன் பண்புகளால் வெளிக்காட்ட தவம் கிடக்கும் நாய்க்கு இருக்கும் பண்புகள் கூட சில மனிதர்களுக்கு இல்லாமல் போனது வேதனைக்குரியதாகும்
ஊரைத்  தின்று ஏப்பம் விட்டு உருக்குக் கம்பியையும் விளிங்கியவர்கள் மார்பில் பாயும் கிடாவாக மாறியிருப்பது நம்முட ஊர்பாசையில் சொல்லுவதன்றால்  என்ன புதினம்டப்பா இது என்று  எஸ் எம் சபீஸ் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினருமான  எஸ் எம் சபீஸ்.  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -