க.கிஷாந்தன்-
மலையகத்தில் கடந்த சில நாட்களாக பிற்பகல் வேளைகளில் பெய்து வரும் மழை காரணமாக பிரதான வீதிகளும் சேதமடைந்துள்ளன. அந்தவகையில் அட்டன் நகரில் இரண்டாவது பிரதான வீதியில் அட்டன் மூஸ்லீம் பள்ளிக்கு முன்பாக உள்ள வீதியின் ஒரு பகுதி தாழ் இறங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்தும் அபாயகரமான சூழலே நிலவுகிறது.
இதனால், அவ்வீதியினூடாக பயணம் செய்யும் வாகன சாரதிகளை அவதானமாக செல்லுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மலையகத்தில் நுவரெலியா, அட்டன், கினிகத்தேன முதலிய பகுதிகளில் குறிப்பாக, அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் மற்றும் அட்டன் - நுவரெலியா வீதியில் அதிக பனிமூட்டம் காணப்படுகின்றமையால் குறித்த வீதியில் பயணம் செய்யும் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்திவுள்ளனர்.