அமைச்சர் பதவியை நிராகரித்தார் மஹிந்த ராஜபக்ஷ..!

தேசிய அரசாங்கத்தின் முடிவின் பிரகாரம் வழங்கப்படவிருந்த மாவட்ட அபிவிருத்தி அமைச்சர் பதவியையும் மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கை முடிவின் பிரகாரம் அந்த மாவட்டங்களை வென்ற கட்சிகளின் தலைமை வேட்பாளர்களுக்கு மாவட்ட அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றிருந்தது. அதன் தலைமை வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

அதனடிப்படையில் எதிர்வரும் நாட்களில் மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்ட அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த அமைச்சுப் பதவியும் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சுப்பதவியாகும்.

எனினும் நேற்று மாலை தனக்கு நெருக்கமான ஊடகவயிலாளர்களைச் சந்தித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்ட அபிவிருத்தி அமைச்சர் பதவியை தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்தில் சாதாரண உறுப்பினராக இருப்பதற்கே தான் விருப்பம் கொண்டுள்ளதாகவும், எந்தவொரு பதவியையும் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -