தோல்வியடைந்தவர்களுக்கு நாடாளுமன்ற பதவி வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு..!

தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டத்தரணி ஒருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

நாகானந்த கொடித்துவக்கு என்ற சட்டத்தரணியே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மக்களால் நிராகரிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பிரதான கட்சிகள் உட்பட்ட பல கட்சிகள் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை அளித்துள்ளன. சிலர் அமைச்சு பதவிகளையும் பெற்றுள்ளனர்.

இது மக்கள் ஆணையை மீறும் செயல் என தெரிவித்து குறித்த சட்டத்தரணி, சுதந்திர சதுக்கத்தில் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -