சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இல:-2 வட்டவளை பின்னோயா தமிழ் வித்தியாலயத்தில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று 27.09.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், வட்டவளை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் என்றால் என்ன?
அதனை தடுப்பதற்கான வழிமுறைகள், அதனை தடுப்பதற்கு பெற்றோர்களுக்கான அறிவுரைகள் போன்றவைகள் உள்ளடங்கிய சிறிய வடிவிலான புத்தகமொன்றும் கலந்து கொண்டார்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.