சவளக்கடை பொலிஸார் ஏற்பாடு செய்த நடமாடும் சேவை..!

எம்.எம்.ஜபீர்-

149ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சவளக்கடை பொலிஸார் ஏற்பாடு செய்த பொலிஸ் நடமாடும் சேவை 15ஆம் கொளனி பல்தேவைக் கட்டிடத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது பொலிஸ் நற்சான்றிதழ், காலங் கடந்த இறப்பு மற்றும் பிறப்பு பதிவுகள், கிராம சேவை உத்தியோகத்தரால் வழங்கப்படும் நற்சான்றிதழ், பொலிஸ் முறைப்பாட்டு பிரதி, கிராம சேவை உத்தியோகத்தர்கள் பிரிவு ஊடாக பெரும்பாலான பிராச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டதுடன், பயன்தரும் மரக்கன்றுகளும் பொதுமக்கள் மற்றும் பாடசாலைகளுக்கு பொலிஸ் நிலையத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.எம்.கலீல், சவளக்கடை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.சாஹிர், கிராம சேவை உத்தியோகத்தர்கள், திவிநெகு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -