மக்கா மினாவில் நடந்த சோகச் சம்பவம் 310 பேருக்கு மேல் மரணம்- படங்கள் இணைப்பு

 இன்று மக்கா மினாவில் சன் நெரிசலில் சிக்குண்டு 310 பேர் பரிதாபமாக உயிரிளந்துள்ளனர்.
 மேலும் 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவலகள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட விபரீதம் சம்மந்தமாகக் கிடைத்த தகவலாவது:
 ஹஜ் புனித யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் மினாவில் கூடியிருந்த போது நெரிசல் ஏற்பட்டது. மினாவில் ஷைத்தானின் மீது கல் எறியும் நிகழ்ச்சியின் போது இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது.

2 வாரத்தில் இரண்டாவது முறையாக மக்காவில் மிகப்பெரிய துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. செப்டம்பர் 11-ம் தேதி மக்காவில் கிரேன் விழுந்து 107 பேர் உயரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -