அக்கரைப்பற்றை சேர்ந்த அன்சார் என்பவர் இன்று காலை மலேசியாவில் காலமானார். புலி அன்சார் அழைக்கப்படும் இவர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் அவர்களின் மச்சானும் ஆவார், அன்னாரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவர் நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்ந்து விட எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்போம்.
அக்கரைப்பற்றில் பயங்கர வாத காலங்களில் பயங்கர வாதிகளை எதிர்த்து போராடியவர் இவர். பிற்காலங்களில் பெரும் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களோடு சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காக பெரும் பணியாற்றியிருந்தார்.
இவர் பெரும் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆவார். 2001 ஆம் ஆண்டில் பேரியல் அஸ்ரப் அவர்களின் இணைப்பதிகாரியாகவும் செயற்பட்டிருந்தார். அக்கரைப்பற்று கடற்கரையில் அமைந்திருக்கும் அன்னை பேரியல் வீதி இவரின் சிந்தனையில் உருவாகிய திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
