நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சிக்கும் புதிய அரசாங்கத்திற்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் முன்னாள் பாதூகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது முகப்புத்தகத்தில் குறிப்பிடுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதில் அவர், ‘மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் என மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
வெற்றியை போன்றே தோல்வியையும் ஏற்று கொள்ளும் அவர், நாட்டை நேசிக்கின்ற தலைவராக பலர் மனங்களில் இருக்கின்றார்.
அத்துடன் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, நாட்டினுள் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு எங்கள் ஆதரவை வழங்குவோம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆதவன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -