15வயதுடைய ஷெய்னப் இப்திகார் எழுதிய ”பவர்டி இஸ் நொட் பசிவிவிடி ”நூல் வெளியீடு...!

ஏ.எஸ்.எம்.ஜாவித்,அஷ்ரப் ஏ சமட்-

லங்கையைச் சேர்ந்தவரும் சவூதி அரேபியா றியாத் பங்களாதேஷ் சர்வதேச கல்லூரியில் கல்வி பயிலும் 15வயது மாணவியான ஷெய்னப் இப்திகார் எழுதிய பவர்டி இஸ் நொட் பசிவிவிடி எனும் ஆங்கில நூல் இன்று (15) கொழும்பு கலதாரி ஹோட்டலில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்விற்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரனவக்க பிரதம அதிதியாகவும், விஷேட அதிதியாக புரவலர் ஹாஷிம் உமரும், கௌரவ அதிதியாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் உட்டப பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் நூலின் முதற் பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொள்வதனையும், ஏனைய பிரதிகளை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் மற்றும் நூலாய்வினைச் செய்த ஊடகவியலாளர் சிஹார் அனிஸ் உட்பட பிரமுகர்கள் நூலாசிரியரிடமிருந்து பெற்றுக் கொள்வதனையும் படங்களில் காணலாம்.

மேற்படி நூலில் தொழில் நிமிர்த்தம் சவூதி அரேபியாவுக்குச் சென்று மரணதண்டனைக்குள்ளான றிஷானா நபிக் ஏன் கொலை செய்யப்பட்டாள் மற்றும் அவரின் வாழ்க்கை வரலாற்றுப் பின்னணி, தொழிலுக்காக மலைநாட்டுப் பெண்கள் படும் துன்பங்கள், இலங்கையின் கல்வி, யுத்தம் மற்றும் சமாதானம், தொழில் சம்பந்தமான விடயங்கள் உள்ளிட்ட தலைப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த நூhசிரியரின் தாயார் ஒரு வைத்தியர் இவரே சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்குள்ளான றிஷானா நபீக்கிற்கு பல்வேறுபட்ட உதவிகளைச் செய்தும் அவரைக் காப்பற்றவும் அரும்பாடுபட்ட டொக்டர் ஹிபாயா இப்திஹார் என்பதும் குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -