பொதுபல சேனாவுக்கு ISIS அச்சுறுத்தல் - அச்சத்தில் ஞானசார

பொதுஜன பெரமுன மற்றும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, ஐஎஸ்ஐஎஸிடமிருந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த அச்சுறுத்தல் குறித்து பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக கட்சி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். கலகொடஅத்தே ஞானசார தேரர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றார். 

தொலைபேசிகள் ஊடாகவே இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் சில அழைப்புகள் ஆப்கானிஸ்தானிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். 
TamilMirror
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -