மக்களினதும், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் உலமாக்களின் ஆசீர்வாதத்துடன் களமிறங்கியுள்ளார் - ஹரீஸ்

ஹாசிப் யாஸீன்-

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகின்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலில் தொழுகையிலும், துஆக்களிலும் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து ஊர் மக்களினதும், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் உலமாக்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டு ஆதரவாளர்களுடன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு அம்பாறை கச்சேரிக்கான பயணத்தை மேற்கொண்டார்.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம.மன்சூர் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -