அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக அன்வர் எம் முஸ்தபா நியமனம்!

றியாஸ் ஆதம்-
ம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் எம் முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விவகாரப் பணிப்பாளராகவும், அக்கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனத்தினை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் அண்மையில் வழங்கி வைத்தார்.

தனியார் கல்லூரியின் பணிப்பாளர் நாயகமும் தொழிலதிபருமான அன்வர் எம் முஸ்தபா தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் முன்னால் உறுப்பினராவார்.

சமூக சேவையாளர் அன்வர் எம் முஸ்தபா அவரது கல்லூரியூடாக தேசிய ரீதியாக சுமார் மூவாயிரம் மாணவர்களுக்கு புலமைப்பரிசிலினை வழங்கி இலவசமாக கல்வி கற்பதற்கான வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அன்வர் எம் முஸ்தபா அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் கட்சியின் இளைஞர் அமைப்புக்களை புனரமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -