காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் 85 வது வருட நிறைவினை முன்னிட்டு நடைபெற்று வந்த கால்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி காத்தான்குடி தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இறுதிப் போட்டிக்கு தெரிவான காத்தான்குடி பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக்கழகம் விளையாடியது.
போட்டி முடிவில் ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம், பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழகத்தை 4:0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.
இப்போட்டி நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் சேகு அலி சேர் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவித்தார். றி
.jpg)