வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கலாசார விழா -படங்கள்








ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்-

ரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் சமாதானக்கல்விப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலை, கலாசார விழா வெகு கோலாகலமாக நடைபெற்றது.

சமாதானக் கல்வி இணைப்பாளர் எம்;ஜிஏ நாஸர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.

இவ்விழாவில் வலயக் கல்விப்பணிப்பாளர் எம்ஐ சேகுஅலி பிரதம அதிதியாகவும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏஎஸ் இஸ்ஸதீன் விஷேட அதிதியாகவும் கலந்துகொண்டனர்.

வெலிகந்தை (சிங்கள) மகா வித்தியாலயம், செங்கலடி (தமிழ்) மத்திய கல்லூரி, காத்தான்குடி மீரா பாலிகா தேசியப் பாடசாலை, ஏறாவூர் அல் - முனீரா பாலிகா மகா வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவிகளது கலாசார நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன.

மேலும், மாயாஜாலம் மற்றும் ஓவியம் வரைதல் போன்ற நிகழ்வுகள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தின.

நிகழ்வுகளின் பங்கேற்பாளர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசுகள் சான்றிதழ்கள், பாடசாலைகளுக்கும் அதிதிகளுக்கும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -