ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் தொழில் வழங்கும் திட்டமொன்றை நடைமுறைபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வூதிய திணைக்களம் குறிப்பிடுகின்றது.
ஓய்வு பெற்றவர்களின் திறன்களுக்கு ஏற்ற வகையில் பொருளாதார வளர்ச்சிக்காக அவர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாக, ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவிக்கின்றார்.
குறிப்பாக அரச சார்பற்ற துறைகளிலும், சுயதொழில் முயற்சிகளிலும் அவர்களை ஈடுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்பொருட்டு 28 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன், ஓய்வு பெற்றவர்களின் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்காகவும், விற்பனை செய்வதற்காவும் புதிதாக இணையத்தளமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் ஓய்வூதிய கொடுப்பனவு பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
