போர் முடிந்த பின் வடக்கில் இராணுவத்துக்கு எந்த வேலையும் இல்லை!

ரு இராணுவ முகாமையேனும் வௌியேற்றாமல், 1000 ஏக்கரை விடுவிப்பதாக கூறி 400 ஏக்கரை மட்டுமே விடுவித்து, அரசியல் ரீதியாக தனக்கு இலாபம் தேடும் பிரதமருடன் நான் எப்படி கைகுழுக்கி மகிழ்ச்சியை வௌியிடுவது என, வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. போர் முடிந்த பின்னர் அவர்களுக்கு வடமாகாணத்தில் எந்த வேலையும் இல்லை. வேண்டுமெனில் பொலிசாரின் தொகையைக் கூட்டட்டும் எனவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார். 

இராணுவத்தினர் மக்களின் காணிகளை மீளளித்து மக்கள் மத்தியில் இருந்து வெளியேற்ற வேண்டுமெனவும் விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -