பொத்துவில் பசரிச்சேனை முன்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

அபு அலா-

பொத்துவில் பசரிச்சேனை முன்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும், பொத்துவில் பிரதேசத்தில் நிலவும் காணி உரிமையாளர்களின் விபரம் அடங்கிய தகவல் பெற்றுக்கொள்ளும் பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (03) பசரிச்சேனை அல் இஸ்றாக் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கலந்து கொண்டு இதனை வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏஸ்.வாசீத் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -