தலைக்க­வ­சத் தடை இன்று முதல்!

முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக் ­க­வ­சங்கள் இன்று 2 ஆம் திகதி முதல் முற்­றாகத் தடைசெய்­யப்­பட உள்ளது என பொது ஒழுங்­குகள் அமைச்சர் ஜோன் அம­ர­துங்க ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதன்படி ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் மோட்டார் சைக்­கிளை செலுத்­து­வோரோ அல்­லது பின்னால் அமர்ந்து செல்­ப­வரோ முகத்தை முழு­மை­யாகமறைக்கும் தலைக்­க­வ­சத்தை அணிந்து பய­ணித்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக உடன் தண்டப் பண பத்­திரம் பொலி­ஸா­ரினால் வழங்­கப்­படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் இச்சட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதல் அமுல் படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் வகன சட்­டத்தின் 158 ஆவது அத்­தி­யா­யத்தின் 2 ஆவது மற்றும் மூன்­றா­வது உப பிரி­வு­களின் கீழும் 1991 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 11 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 644/ 26 ஆம் இலக்க அரசின் விஷேட வர்த்­த­மானி அறி­வித்­தலின் கீழும் 2015 ஆம் ஆண்டின் தண்­டப்­பண அதி­க­ரிப்பு சட்­டத்தின் கீழும் இந் நடவ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­து.

எனினும் சாத­ர­ண­மாக பயன்­ப­டுத்­தப்­படும் தர­மான தலைக் கவ­சங்­களில் முன் பக்­க­மாக வைசர் எனப்­படும் திறை­யினை பயன்­ப­டுத்த தடை இல்லை. அப்­படி வைசர் திரையை பயன்­ப­டுத்­து­வ­தானால் அது பல் வர்­ணங்­களைக் கொன்­ட­தாக இருக்க முடி­யாது என்­ப­தையும் சட்டம் குறிப்­பி­டு­வ­துடன் முகம் தெளி­வாக தெரியும் படி இருக்க வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்­து­கின்­றது.

1983 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட 245 ஆம் இலக்க வர்த்­த­மானி அறி­வித்­தலில் இந்த விடயம் குறித்து வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. அதில் மோட்டார் சைக்­கிளில் பய­ணிப்­ப­வர்­களை 25 மீற்­றர்­க­ளுக்கு அப்பால் இருந்தே தெளி­வாக அவ­தா­னிக்க கூடி­ய­தாக தலைக்­க­வ­சங்கள் அமைய வேண்டும் என்­பது வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -