ஏஎம்.றிகாஸ்-
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரெயில் வண்டியில் மோதுண்டு 22 வயதுடைய வாலிபர் உயிழந்துள்ளார்.
ஏறாவூர் -மாவடிவேம்பு பிரதேசத்தில் (செவ்வாய் கிழமை) இரவு 8.45 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பத்மநாதன் சதீஸ்வரன் என்ற இளைஞனே பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர்ப் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)