ஏறாவூரில் வாகன விபத்து!

ஏறாவூர ஏஎம் றிகாஸ்-
ட்டக்களப்பு,  ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு பிரதேசத்தில மயிர்க்கூச்செறியும் விதத்தில் வாகன விபத்தொன்று இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம் பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கெப் ரக வண்டியொன்று வீதியோரமிருந்த பாரிய மின்சாரக் கம்பமொன்றை துண்டம் துண்டமாக முறித்துள்ளது.

இவ்வாகனம் அதிக வேகமாக செலுத்தப்பட்டதனால் சாரதியின் கட்டுப்பாட்டினை மீறி இவ்விபத்து இடம் பெற்றிருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் கெப் வண்டி பாரியளவில் சேதமடைந்துள்ள போதிலும் இதைச் செலுத்திச் சென்ற சாரதி சிறிய காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -