கல்முனை மாநகர சபை தீயணைப்பு படையினருக்கான விசேட பயிற்சி!

அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தீயணைப்பு படையினருக்கான விசேட பயிற்சி நேற்று செவ்வாய்க் கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் விடுத்த வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாநகர சபை இப் படையினருக்கு ஒரு வார கால விசேட பயிற்சியை வழங்கவுள்ளது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் முன்னிலையில் நடை பெற்றது.

இதில் கல்முனை முதல்வரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படைப் பிரிவு 24 மணித்தியாலங்களும் இயங்கும் வகையில் அதனை செயற்றிறன் மிக்கதாக மாற்றியமைக்கும் நோக்கில் அப்படையினரை பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக இந்த ஒரு வார கால பயிற்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -