கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடாத்தப்பட்ட இலக்கியக் களம் சிறப்பு நிகழ்வு!

எச்.எப். ரிஸ்னா-
கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெள்ளி தோறும் நடாத்தப்படும் இலக்கியக் களம் நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது. திருமதி வரதா யோகநாதன் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். 

சட்டத்தரணி திருமதி இராஜகுலேந்திரா இந் நிகழ்வுக்கு தலைமை தாங்கியதுடன் சிறப்பு உரைஞராக கலந்து கொண்ட வெலிகம ரிம்ஸா முஹம்மத் ஈழத்துப் பெண் கவிஞர்களின் குரல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். 

நிகழ்ச்சியின் இறுதியில் கொழுந்து ஆசிரியர் அந்தினி ஜீவா, கலைஞர் கலைச் செல்வன், சட்டத்தரணி இராஜகுலேந்திரா ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள். இறுதியில் தமிழ்ச்சங்கம் சார்பாக சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்களால் உரைஞர் ரிம்ஸா முஹம்மதுக்கு நூல்களும் வழங்கி வைக்கப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -