கிறிக்கெட் சுற்றுப் போட்டியில் பொத்துவில் பிரதேச செயலகம் வெற்றியீட்டி சம்பியனாக தெரிவு!

எம்.ஏ.தாஜகான்-

ம்பாரை மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான 07 பேர் மட்டுப்படுத்தப்பட்ட 05 ஓவர் கொண்ட கிறிக்கெட் சுற்றுப் போட்டியில் பொத்துவில் பிரதேச செயலகம் வெற்றியீட்டி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

அம்பாரை மாவட்டத்தில் 10 பிரதேச செயலகங்களும், அம்பாரை மாவட்ட செயலகமும் கலந்து கொண்ட போட்டித் தொடரில் இறுதிப் போட்டிக்கு பொத்துவில் பிரதேச செயலக அணியும், மகாஓயா பிரதேச செயலக அணியும் 
தெரிவுசெய்யப்பட்டது. 

இரண்டு அணிகளுக்குமான இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) பானமை பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. அணியின் தலைவர் எம்ஜ. ராபியின் தலைமையில் முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய பொத்துவில் பிரதேச செயலக அணியினர் 05 ஓவர் முடிவில் 100 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மகாஓயா அணியினர் மொத்தமாக 23 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்தனர். மொத்தமாக 77 மேலதிக ஓட்டங்களால் பொத்துவில் பிரதேச செயலக அணியினர் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

பொத்துவில் பிரதேச செயலக அணியினரின் இவ்வெற்றிக்கு பெரிதும் ஒத்துழைப்பையும், வழிகாட்டலையும் வழங்கிய பிரதேச செயலாளர் என்எம்.முசர்ரத் அவர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக அணித்தலைவர் எம்.ஜ. ராபி கருத்து தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -