தொழில் வாய்ப்பு கருதி வெளிநாட்டில் தொழில் புரியும் திருகோணமலை மாவட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளான பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு திருகோணமலை சென் மேரிஸ் கல்லூரியில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல கலந்து கொண்டு சிறப்பித்ததோடு உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இம்றான் மகருப், நாகேஷ்வரன் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம்.மஹ்ரூப், சுனில் சாந்த ரனவீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.