உம்றா கடமையை நிறைவு செய்து இன்று தாயகம் திரும்பிய மாகாண சபை உறுப்பினர்கள்!

பைஷல் இஸ்மாயில் –

டந்த மாதம் (28) ஆம் திகதி உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக புனித மக்கமா நகர் சென்ற மாகாண சபை உறுப்பினர்கள் இன்று (02) திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நாடு திரும்பினர்.

சவூதி அரேபியாவில் அமையப்பெற்ற புனித மக்கமா நகருக்கு உம்றா கடமையை நிறைவேற்றுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் ஆகியோர் உம்றா கடமைகளை நிறைவேற்றுவதற்காக கடந்த மாதம் (28) ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

இவ்வாறு பயணத்தை மேற்கொண்ட மாகாண சபை உறுப்பினர்கள் தங்களின் உம்றா கடமைகளை நிறைவு செய்துவிட்டு இன்று (02) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -