பியசேன எம்.பியின் ஊடக இணைப்பாளர் றியாஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைவு!

பைஷல் இஸ்மாயில்-
ம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்எ பீ.எச்.பியசேனவின் ஊடக இணைப்பாளர் எம்.ஐ.எம்.றியாஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

இந்நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இன்று (04) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கிமின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேனவின் ஊடக இணைப்பாளராக கடந்த ஆண்டுகள் இயங்கி வந்த ஊடகவியலாளரும் அதிபருமாகிய எம்.ஐ.எம்.றியாஸ் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.

இதில் மு.காவின் உயர்பீட உறுப்பினர் யூ.எல்.வாஹிட், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் முஹம்மட் கலீல் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -