முஸ்லிம் அரசியலில் மாற்றம் ஏற்படவேண்டும்-முஜிபுர் ரஹ்மான்!

லங்­கையின் முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளுக்கு முன்பிருந்த பெரும் மரி­யாதையினால் சமூகம் தலை­நி­மிர்ந்து வாழ்ந்­தது. ஆனால் இன்­றைய தலை­மைகள் பதவி ஆசையில் மூழ்­கிப்­போ­யி­ருப்­ப­தும் மோசமான அரசியல் செயற்பாடுகளினாலும் எமது சமூகத்திற்கு பெரும் இழுக்கு ஏற்­ப­டுத்­து­வ­தாக மேல்­மா­காண சபை உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்­தினார்.

எனவே நாம் புதியதொரு அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கி சமூக எழுச்சிக்கு வித்திட அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் பிரி­மிளஸ் கொஸ்தா மற்றும் கொழும்பு மாந­கர சபை உறுப்­பினர் விக்­னேஸ் ஆகியோரின் ஏற்­பாட்டில் ஜிந்­து­பிட்­டியில் நேற்­றைய தினம் இடம்­பெற்ற சுதந்­திர தின நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் மேற்­காண்­ட­வாறு தெரி­வித்தார். 

அங்கு அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு நீண்ட வர­லாறு இருக்­கின்­றது. 2000 ஆம் ஆண்­டு­க­ளுக்கு முன்னர் வர­லாறு நெடு­கிலும் எமது சமூகம் தலை­நி­மிர்ந்து வாழ்ந்­துள்­ளது. ஏனெனில் அப்­போ­தைய தலை­வர்­க­ளான சித்­தி­லெப்பை,துருக்கித் தொப்பி அப்துல் காதிர், அப்துல் அஸீஸ், ரீ.பி.ஜாயா, வாப்­பிச்சி மரிக்கார் போன்ற தலை­வர்கள் நாட்­டுக்கு சேவை­யாற்றி சமூ­கத்­திற்கு நற்­பெ­யரை பெற்­றுத்­தந்­தனர். பிற்­கா­லத்தில் வந்த டாக்டர் கலீல், இஸ்­மாயீல், பாக்கிர் மாக்கார், பதி­யுதீன் மஹ்மூத், ஏ.சி.எஸ்.ஹமீட் போன்­றோரும் இவர்கள் வழி தொடர்ந்து சமூ­கத்தை பாது­காத்­தனர். 

இவர்கள் ஏனைய மதத்­த­வர்­க­ளாலும் போற்­றப்­பட்­டனர். அத்­தோடு நாட்டின் அபி­வி­ருத்­திக்கும் தேசிய ஒரு­மை­ப்பாட்­டிற்­காவும் பாடு­பட்­டனர். இதனால் எமது சமூகம் தனித்­து­வ­மாக நாட்டில் மிளிர்ந்­தது.

பின்னர் எமது சமூ­கத்­திற்கு மத்­தியில் இன ரீதி­யி­லான கட்­சிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. மத வாத உணர்­வ­லைகள் எமது சமூ­கத்­திற்­குள்ளும் துர­திஷ்­ட­வ­ச­மாக ஏற்­பட்­டது. இதன்­பின்னர் எமது சமூகம் மாற்று மதத்­த­வர்­களால் மாற்­றுக்­கண்­கொண்டு பார்க்கும் நிலை ஏற்­பட்­டது. ஆனாலும் சில கார­ணங்­களை வைத்து பார்க்­கும்­போது வடக்கு கிழக்கு பகு­திக்கு தனிக்­கட்­சியின் அவ­சியம் இருந்­தாலும் ஏனைய பகு­தி­க­ளுக்கு அவ­சி­ய­மில்­லாமலேயே இருந்­தது.

முஸ்­லிம்­களில் உயர் மட்­டத்­தினர் அதா­வது அரச சேவை­யா­ளர்கள், பெரும் வர்த்­த­கர்கள், அர­சி­யல்­வா­திகள் ஆன்­மீகத் தலை­வர்கள் என்­போரின் செயற்பா­டு­களை மைய­மா­க­க்கொண்டு எமது சமூகம் மதிக்­கப்­பிடப்ப­டு­கின்றது. அரசி­யல்­வா­திகள் மக்கள் மத்­தியில் அதிகம் இருக்­கக்­கூ­டி­ய­வர்கள். இவர்­களின் செயற்­பா­டு­களை மக்கள் கூர்ந்து கவ­ணிக்­கின்­றனர். 

2000 ஆம் ஆண்­டுக்கு பின்னர் பாரா­ளு­மன்­றத்­திலும் ஏனைய அரச அவை­க­ளிலும் அங்கம் வகித்த முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் ஒரு கட்­சியில் நிலை­யாக இருந்­துள்­ள­னரா என பார்த்தால் ஓரி­ரு­வரை தவிர ஏனையோர் கட்சி மாறு­வதை ஒரு தொழி­லா­கவே கொண்­டுள்­ளனர். 

ஒரு கட்­சியில் கொள்­கையின் அடிப்­ப­டை­யி­லேயே இணை­ய­வேண்டும். ஆனால் முஸ்லிம் தலை­வர்கள் அடிக்­கடி கட்சி தாவி கொள்­கை­யற்­ற­வர்கள் என்­ப­தனை நிரூ­பிக்­கின்­றனர். 

அத்­தோடு 2000 ஆம் ஆண்­டுக்கு பின்னர் பல முஸ்லிம் கட்­சி­களும் முளைத்­துள்­ளன. இவற்­றாலும் சமூ­கத்­திற்கு எவ்­வித பிர­யோசனமும் இல்­லாமல் இருக்­கின்­றது. மாறி­வரும் ஒவ்­வொரு அர­சாங்­கத்­திலும் இவர்கள் அங்கம் வகிக்­கின்­றனர். ஆனாலும் பல பகு­தி­களில் முஸ்லிம் சமூகம் எவ்­வித அடிப்­படை வச­தி­க­ளு­மற்­ற­நி­லையில் வாழ்­கின்­றனர். இதன் மூலம் இவர்கள் மூலம் கிடைக்கும் பயன் பற்றி மக்கள் இல­கு­வாக அறிந்­து­கொள்ள முடியும். 

கிழக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்சர் விவ­காரம் தற்­போது சூடு­பி­டித்­துள்­ளது. இதற்­காக முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்குள் தலை­யனை சண்டை இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் காங்­கிரஸ் காரர்கள் அண்­மையில் வெறும் 11 நாட்கள் மாத்­தி­ரமே அமைச்­சுப்­ப­தவி இல்­லாமல் இருந்­தனர். 

அத்­தோடு அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸும் 15 நாட்கள் வரையில் அமைச்சு பொறுப்­புகள் இல்­லாமல் இருந்­தனர். இவர்கள் வெற்­றி­பெரும் அணி­யுடன் இணைந்­து­கொண்­ட­னரே தவிர ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­யீட்­டு­வ­தற்கு எவ்­வி­த­மான பங்­க­ளிப்பும் செய்­ய­வில்லை. 

அவர்கள் மீண்டும் அமைச்­சர்­க­ளா­கி­விட்­டனர். இவர்கள் இன­வா­தி­களின் செயற்­பாட்டை கண்­டித்தே முன்­னைய அர­சி­லி­ருந்து வெளியே­றி­தாக கூறு­கின்­றனர். ஆனால் 2012 ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி தம்­புள்ளை பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­ட­போது அதற்கு பின்னர் 3 வரு­டங்கள் மஹிந்த அர­சுக்கு ஆத­ர­வ­ளித்து வந்­ததை மக்கள் இல­குவில் மறந்­து­விட மாட்­டார்கள். 

இது இப்­ப­டி­யி­ருக்க புதிய தேசிய அர­சாங்­கத்தில் அமைச்­சுப்­ப­த­வியை பெற்­றுக்­கொண்ட பைஸர் முஸ்தபா பதவியை இராஜினாமா செய்துகொண்டுள்ளார். எனினும் அவர் பதவியில் அதிகாரம் இல்லை என்பதனாலேயே இராஜினாமா செய்துள்ளார். 

இவர் வெறும் ஐந்து நாட்களுக்கு முன்னரே முன்னைய அரசிலிருந்து வெளியேறி சமூகத்திடமிருந்து புள்ளிகளை பெற்றுக்கொள்ள முயற்சித்தவர். இவரால் மைத்திரியின் வெற்றிக்கு எந்தவொரு பங்களிப்பும் கிடைக்கவில்லை. கண்டியில் மக்களின் வாக்குகளை பெற்று வெற்றிபெற்ற இவர் கொழும்பில் கூடாரமிட்டு அரசியல் நடத்துகின்றார். இவர்போன்ற அரசியல்வாதிகளை மக்கள் தற்போது புறக்கணிக்க தொடங்கிவிட்டனர். 

தற்போதைய முஸ்லிம் சமூகம் அரசியலில் விழிப்படைந்துவிட்டது. இதற்கு சிறந்த உதாரணம் கடந்த ஜனாதிபதி தேர்தலாகும். இதன்போது சர்வாதிகார குடும்ப ஆட்சியாளனை மக்கள் விரட்டியடித்தனர். இனி அவர்களுக்கு கூஜா தூக்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளையும் விரட்டியடிக்க மக்களுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. 

எனவே முஸ்லிம் அரசியலில் மாற்றம் ஏற்படவேண்டும். பதவிகளுக்காக அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு மக்களுக்காக அரசியல் செய்ய வேண்டும். அப்போதுதான் எமது சமூகத்திற்கு விடிவு கிடைக்கும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -