பாகிஸ்தானுடன் உறவினை வலுப்படுத்திக் கொள்வதற்காக, ‘தொழில்நுட்ப திறன் மற்றும் மனித திறமைகள்’ குறித்த உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளது.
இந்நிலையில், அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ROSATOM நிறுவனத்துடன் முன்கூட்டியே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதெனவும் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயற்படவும் இலங்கை எதிர்பார்த்துள்ளது.
ஆனால் அந்த நாடுகளுடன் அணுசக்தி ஒத்துழைப்பு கிடையாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியா சென்றிருந்த அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க டெல்லியில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
