வெலே சுதா தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் விசாரணை!

போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 'வெலே சுதா' என்கிற சமன் குமாரவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து பொலிஸார் விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வெலே சுதா ஆஜர்படுத்தப்பட்டார். 

பொலிஸார் சமர்ப்பித்த சாட்சியங்களையும், அறிக்கைகளையும் ஆராய்ந்த நீதிமன்றம், அவரை மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

போதைப் பொருள் கடத்தலின் மூலம் 17 கோடி ரூபா பெருமதியான சொத்து வாங்கிய குற்றச்சாட்டின் பெயரிலேயே வெலே சுதா மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அண்மையில் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டிருந்த வெலே சுதா, இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -