தட்டி பார்த்தும் லாவண்யா கதவை திறக்காததால் ஜன்னல் வழியே பார்த்தபோது தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாவண்யா தங்கியிருந்த அறையில் அவர் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். மாணவி லாவண்யா எழுதி வைத்திருந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அம்மா என்னை மன்னிச்சிடு, எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்கவில்லை, அதனால் வேறு உலகத்திற்கு போகிறேன். கண்டிப்பாக உங்களை பார்க்க ஒரு நாள் வருவேன். பாப்பா, தம்பி, அப்பா, ஆயா, மாமா, அக்கா, சொக்கநாதன் எல்லோரையும் பார்க்க ஒரு நாள் வருவேன்.
பாப்பாவை மட்டும் எந்த விடுதியிலும் சேர்க்காதே, அப்படி சேர்த்தால் பெண்கள் மட்டும் இருக்கிற விடுதியில் சேர்க்க வேண்டும். ஆண்கள் படிக்கும் பள்ளியில் மட்டும் சேர்க்காதே. என்னை (கலாய்க்கிற) கேலி செய்தவங்க நல்லாவே இருக்கக்கூடாது. அவர்களை நான் சும்மா விட மாட்டேன். என்னுடைய சாவை நானே தேடிக்கொண்டேன். எனக்கு உதவி செய்த தோழிகளுக்கு நன்றி என் சாவுக்கு இந்த பள்ளிக்கும் விடுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் கிண்டல் செய்ததால் லாவண்யா தற்கொலை செய்துள்ளார் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடிதத்தின் அடிப்படையில் மாணவியை ஈவ்டீசிங் செய்த மாணவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பாவை மட்டும் எந்த விடுதியிலும் சேர்க்காதே, அப்படி சேர்த்தால் பெண்கள் மட்டும் இருக்கிற விடுதியில் சேர்க்க வேண்டும். ஆண்கள் படிக்கும் பள்ளியில் மட்டும் சேர்க்காதே. என்னை (கலாய்க்கிற) கேலி செய்தவங்க நல்லாவே இருக்கக்கூடாது. அவர்களை நான் சும்மா விட மாட்டேன். என்னுடைய சாவை நானே தேடிக்கொண்டேன். எனக்கு உதவி செய்த தோழிகளுக்கு நன்றி என் சாவுக்கு இந்த பள்ளிக்கும் விடுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் கிண்டல் செய்ததால் லாவண்யா தற்கொலை செய்துள்ளார் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடிதத்தின் அடிப்படையில் மாணவியை ஈவ்டீசிங் செய்த மாணவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
