மு.கா.வின் தீர்­மானம் முஸ்­லிம்கள் தலை­நி­மிர்ந்து வாழக்­கூ­டி­ய­தா­கவே இருக்கும் - பிர­தி­மேயர் அப்துல் மஜீத்

முப்­பது வருடப் போராட்டம் தோல்­வி­ய­டைந்த நிலை­யிலும் தலை­நி­மிர்ந்து நிற்கும் தமிழர் சமு­தாயம் சோரம் போகாது தலை­நி­மிர்ந்து நின்று அர­சி­யலில் கோலோச்சிக் கொண்­டி­ருப்­பது முன்­னு­தா­ர­ண­மாகும் என கல்­முனை மாந­கர பிரதி மேயர் ஏ.எல்.அப்துல் மஜீத் கூறினார்.

சாய்ந்­த­ம­ருது அல் – ஜலால் வித்­தி­யா­லய ஓ.எல் தின விழாவில் கௌரவ அதி­தி­யாக கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அதிபர் எஸ். நபார் தலை­மையில் நடை­பெற்ற நிகழ்வில் அவர் தொடர்ந்து குறிப்­பி­டு­கையில் :-

ஜனா­தி­பதித் தேர்­த­லொன்றை எதிர்­நோக்­கி­யி­ருக்கும் கால கட்டம் இது­வாகும். கொழும்பில் நேரத்­திற்கு நேரம் அர­சியல் தீர்­மா­னங்கள் மாற்­ற­ம­டைந்து வரு­கின்­றது.

இந்த நிலையில் மிக நெருக்­க­டி­யான கால­கட்­டத்தில் நாமி­ருந்து கொண்­டி­ருக்­கின்றோம். முஸ்லிம் சமு­தா­யத்­திற்கு மட்­டு­மல்ல சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கே மிக நெருக்­க­டி­யான கால­கட்டம் இது­வாகும்.

இலங்கை அர­சியல் வர­லாற்றில் 1956இற்குப் பிறகு சிறு­பான்மை சமூகம் எப்­படி இத்­தேர்­தலில் தீர்­மா­ன­மெ­டுப்­பது என்ற தடு­மாற்ற நிலையிலுள்­ளது.

பெரு­மையும் வர­லாறும்

முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு ஒரு பெரு­மை­யி­ருக்­கின்­றது. வர­லா­று­முள்­ளது. அந்த வர­லாற்றுத் தொடரை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.

1988 ஆம் ஆண்­டி­லி­ருந்து 1996 ஆம் ஆண்டு வரை நடை­பெற்ற மூன்று ஜனா­தி­பதி தேர்­தல்­களில் ஆட்சி அதி­கா­ரத்தைத் தீர்­மா­னிக்கும் ஒரு கட்­சி­யாக முஸ்லிம் காங்­கிரஸ் திகழ்ந்­துள்­ளமை வர­லா­றாகும்.

ஆனால் இன்­றைய நிலை மிகவும் நெருக்­க­டி­யா­ன­தாகும். அர­சு­ட­னி­ருந்து பங்­கா­ளி­யாக விருந்து யுத்­தத்தை முன் கொண்டு செல்­வ­தற்குப் பலத்தைக் கொடுத்­தி­ருந்த ஜாதிக ஹெல உறு­மய கட்சி 34 அம்சக் கோர்க்­கை­களை முன்­வைத்து அர­சுக்கு நிபந்­தனை விதித்­ததால் அதை ஏற்க அரசு மறுத்­ததன் விளை­வாக அக்­கட்சி இன்று எதி­ர­ணிக்கு ஆத­ரவு வழங்க முன்வந்­துள்­ளது.

அக்­கட்சி முன்­வைத்த 34 அம்சக் கோரிக்­கைகள் என்ன? சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு உகந்­ததா ? சிறு­பான்மை சமூ­கங்­களை நெருக்­கடி நிலைக்குள் தள்­ளக்­கூ­டி­யதா? சிறு­பான்மை சமூ­கத்தின் அர­சியல் முது­கெ­லும்பை உடைத்து எறி­யக்­கூ­டி­யதா? என்­பது பற்­றி­யெல்லாம் ஆழ­மாக ஆராய வேண்­டி­யுள்­ளது.

நம் தலைவர்

நமது பெருந்­த­லைவர் மர்ஹும் அஷ்ரப் ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஏற்­றுக்­கொண்டார்.

ஆனால் இன்று ஜனா­தி­பதி முறையை இல்­லா­தொ­ழிக்கப் போவ­தாக கூறி மைத்­திரி அணி­யினர் வந்­துள்­ளனர். பாரா­ளு­மன்­றத்­தேர்தல் தொகுதி முறையை உள்­ள­டக்­கி­ய­தாக மாற்­றப்­போ­கி­றோ­மென்றும் கூறு­கின்­றனர்.

அப்­ப­டி­யானால் தேர்­தலில் ஐந்தே ஐந்து ஆச­னங்­கள்தான் முஸ்­லிம்­க­ளுக்கு கிடைக்கும். இவ்­வாறு நம் சமூ­கத்தின் அர­சியல் முது­கெ­லும்பு உடைத்­தெ­றி­யப்­ப­டு­மென்­ப­தையும் நாம் கவ­னத்­திற்­கொள்ள வேண்டும். ஆட்­சி­யினர் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாமல் ஏமாற்றிக் கொண்­டி­ருக்கும் நிலை­மையும் இன்­னொரு புற­முள்­ளது.

இப்­ப­டி­யான ஒரு கால கட்­டத்தில் முஸ்­லிம்­க­ளு­டைய அர­சியல் உரி­மை­களை பெற்­றெ­டுப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்­தை­களில் முஸ்லிம் காங்­கிரஸ் இறங்­கி­யுள்­ளது. அது இன்னும் முற்­றுப்­பெ­ற­வில்லை.

பேச்­சு­வார்த்தை

கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். அப்­போது முஸ்­லிம்­க­ளு­டைய கோரிக்­கைகள் கவ­னத்­தி­லெ­டுக்­கப்­ப­டு­மென்றே சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றது.

இங்கு பிர­தம அதி­தி­யாக கலந்துகொண்­டி­ருக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீஸ் நினைத்தால் ஒரு அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ராக வரலாம். அந்­த­ள­வுக்கு நிலைமை போயுள்­ளது.

உரி­மை­பற்றி பேசிய …

முஸ்லிம் சமு­தா­யத்தின் உரிமை பற்றி பேசிய ரிஷாத் பதி­யு­தீனின் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கேவலம் ஒரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­விக்­காக இன்று சோரம் போயி­ருக்­கின்­றது. போதாக்­கு­றைக்கு பிரதி அமைச்சர் பத­வியும் வேண்­டுமாம். இதுதான் நம்­ச­மூ­கத்தின் இன்­றைய நிலை­யாகும்.

இன்று முப்­பது வருடப் போராட்டம் தோல்­வி­ய­டைந்த நிலை­யிலும் தலை­நி­மிர்ந்து நிற்கும் தமிழர் சமு­தாயம் முன்­னு­தா­ர­ண­மா­க­வுள்­ளது.

24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் தீர்­மா­ன­மெ­டுத்து நடை­மு­றைப்­ப­டுத்தக் கூடிய ஒரு சமு­தா­ய­மாக தமிழர் சமு­தா­ய­முள்­ள­துடன் அர­சி­யலில் கோலோச்சிக் கொண்­டு­மி­ருக்­கின்­றது.

அங்கு தமிழர் பிர­தே­சங்­களில் அபி­வி­ருத்­திகள் நடக்­க­வில்­லையா? அபி­வி­ருத்­திக்­காக அர­சு­ட­னி­ருக்க வேண்­டிய தேவை­யில்லை.

ஆனால் அந்த சமு­தா­யத்­தைப்­போன்று நமது முஸ்லிம் சமு­தாயம் பண்­பட்ட சமு­தா­ய­மல்ல.

பண்­பட்ட சமு­தாயம்

இலங்கை அர­சி­யலில் பண்­பட்ட சமு­தா­ய­மாக தமிழ் சமு­தாயம் திகழ்­கின்­றது. ஒற்­றுமை மிகுந்த சமு­தா­ய­மது. இந்த நாட்டில் ஆட்சி அதி­கா­ரத்தை தீர்­மா­னிக்கும் ஒரு சமு­தா­ய­மாக இருந்தும் கூட ஆட்­சியில் பங்கு கொள்­ளக்­கூ­டாது என்ற உறு­திப்­பாட்டில் அச்­ச­மு­தா­ய­முள்­ளது.

இப்­படி ஒரு சமு­தாயம் வட­–கி­ழக்­கி­லி­ருக்கும் போதுதான் நாம் வட­–கி­ழக்கில் சுய நிர்­ணயம் பற்றி பேசு­கின்றோம்.
உரிமை

வரப்­போகும் தேர்தல் எது­வாக இருந்­தாலும் சரி முஸ்லிம் சமு­தா­யத்தின் உரி­மைகள் பற்றிப் பேசும் அர­சி­ய­லா­கவே அக்­களம் அமையும்.

இன்று பௌத்த சிங்­கள பேரி­ன­வாத சக்­திகள் இந்த அரசைக் கைப்­பற்­றவும் ஆட்­கொள்­ளவும் முன்­னிற்கும் வேளையில் சிங்­கள பௌத்த அர­சொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு நாம் துணை போவதா? அந்த ஆட்சியில் நாமும் பங்குதாரர்களாக இருப்பதா என்ற கேள்வியும் இன்றுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைவராக வந்த பிறகு இன்றைய கால கட்டம் மிகப்பெரிய சோதனையாக அமைந்துள்ளது.

இருப்பினும் எடுத்தேன் - கவிழ்த்தேன் என்று தீர்மானிக்க முடியாது. சிறுபான்மை சமுதாயம் உணர்ச்சிப்பிளம்பாக மாறி விடவும் கூடாது.எனவே ஆற அமர தீர்க்கமானஆய்வுகளை மேற்கொண்டே முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கும். அந்த தீர்மானம் முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து வாழக்கூடிய தீர்மானமாகவே அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :