மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் வழங்கும் நிகழ்வு




பி.எம்.எம்.ஏ.காதர்-

ட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம், உலக உளநல தினத்தை முன்னிட்டு நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான 'உளவியல் விருது' வழங்கும் நிகழ்வு நிலைய பணிப்பாளர் திருமதி.தேவரஞ்சினி பிரான்சிஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. 

இதில் மட்டக்களப்பு வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளன பணிப்பாளர் நாயகம் வி.ரஞ்சிதமூர்த்தி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு இணைப்பாளர் ஏ.சி.ஏ அசீஸ், வவுணதீவு சுகாதார வைத்திய கலாநிதி.ரி.கலைச்செல்வி ஆகியோர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். உளநல சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு தையல் இயந்திரம் மற்றம் அன்பளிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :