அரசியலமைப்பில் புதிய பிரச்சினைகள் தோன்றலாம்-ரணில்

மூன்­றா­வது முறை­யாக தன க்கு போட்­டி­யிட முடி­யுமா என்­ பது தொடர்பில் நீதி­மன்ற ஆலோ­ ச­னையை ஜனா­தி­பதி பெறு­வ­தி­னூ­டாக அர­சி­ய­ல­மைப்பில் புதிய பிரச்­சி­னைகள் தோற்­று­விக்­கப்­படும். இவ்­வாறு உயர் நீதி­மன்­றத்­திடம் ஜனா­தி­பதி விளக்கம் கோரி­யுள்­ளமை வேடிக்­கை­யா­னது ஆகும். இதன் மூலம் ஜனா­தி­ப­திக்­கான அதி­கா­ரங்­களும் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்று எதிர்க்­கட்சி தலை­வரும் ஐ.தே.காவின்.தேசிய தலை­வ­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க குற்றம் சுமத்­தினார்.

அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­தி­னா­லேயே இத்­த­கைய பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ளது. அதி­கா­ரத்தை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­காக நிறை­வேற்று அதி­காரம் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­ப­டு­கின்­றது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

நுகே­கொட இளைஞர் கழ­கத்தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் போதே அவர் இதனை தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்;

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, தான் மூன்­றா­வது முறை­யாக ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட முடி­யுமா என்­பது தொடர்பில் உயர் நீதி­மன்­றத்­திடம் விளக்கம் கோரி­யுள்ளார்.

அர­சி­ய­ல­மைப்பின் 17ஆவது திருத்த சட்­டத்தை நீக்கி 18 ஆவது திருத்த சட்டம் கொண்டு வரப்­பட்­ட­மையே இத்­த­கைய பிரச்­சி­னை­க­ளுக்கு மூல கார­ண­மாகும்.
இந்­நி­லையில் ஜனா­தி­பதி உயர் நீதி­மன்­றத்­திடம் விளக்கம் கோரி­ய­மை­யி­னூ­டாக அர­சி­ய­ல­மைப்பில் புதிய பிரச்­சி­னைகள் தோற்­று­விக்­கப்­ப­டலாம்.

எனவே அதி­கா­ரத்தை தக்க வைத்து கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மை­யையும் துஷ்­பி­ர­யோகம் செய்­கிறார்.

முன்னாள் நீதி­ய­ரசர் சரத் என் சில்­வாவின் கூற்­றினை மைய­மாக கொண்டு தானே உயர் நீதி­மன்­றத்­திடம் ஆலோ­சனை கோரு­வது உரிய தீர்­வல்ல.
ஆகையால் ஜாதிக ஹெல உறு­ம­ய­வினால் முன்­வைக்­கப்­பட்ட 19 திருத்த சட்­டத்தை அடுல்­ப­டுத்­து­வ­த­னூ­டா­கவே இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வினை பெற்­றுக்­கொள்ள முடியும்.

ஜனா­தி­பதி இவ்­வாறு நீதி­மன்­றத்­திடம் விளக்கம் கோரு­வது வேடிக்­கை­யா­க­வுள்­ளது. எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷ வின் தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டது. தற்போது மக்கள் வாழ வழியின்றி தவிக்கின்றனர்.

எனவே இந்த சர்வாதிகார ஆட்சியின் மீதான மக்களின் எதிர்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :