அம்பாரை நிந்தவூர்ப் பிரதேசத்தில் இன்று அதிக மீன்பிடி!

 ஏ.ல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

ம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களான நிந்தவூர், ஒலுவில், 
அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை ஆகிய  பிரதேசங்களில் அண்மைக் காலங்களாக அதிக பீன்கள் கரைவலைகளில் பிடிபட்டு வருகின்றன.

இன்று (06) நிந்தவூர் பிரதேசத்தில் மிகக் கூடுதலான கீரி மீன்கள் கரை வலைகளில்  பிடிபட்டதாகவும், ஒரு கிலோ கீரி மீன் நூறு ரூபாவுக்கு விற்கப்பட்டதாகவும் எமது  பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சுமார் ரூபாய் 65 இலட்சம் பெறுமதியான மீன்கள் இன்று பிடிபட்டதாகவும், இதன் மூலம்  மீனவர்களினதும், மீன் வியாபாரிகளினதும் வருமானம் அதிகரித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. 

பிடிக்கப்பட்ட மீன்களில் அதிகமானவை குளிரூட்டப்பட்ட பெட்டிகளில்  அடைக்கப்பட்டு, இலங்கையின் ஏனைய பிரதேசங்களுக்கு வியாபாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :