ரணில், சந்திரிகா, கரு, சோபிததேரர் நால்வரில் ஒருவரே பொதுவேட்பாளர்!

திர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது எதி­ர­ணியில் பொதுவேட்­பாளர் ஒரு­வரை தெரிவு செய்­வது தொடர்பில் கோட்டே நாகவிகா­ரையின் விகா­ரா­தி­ப­தியும் சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலை­வ­ரு­மான மாது­லு­வாவே சோபித தேரர் பிர­தான எதிர்க்­கட்­சிகள் உள்­ளிட்ட முக்­கிய அர­சியல் பிர­மு­கர்­களை நேற்று சந்­தித்­துள்ளார்.

இந்தச் சந்திப்புக்களையடுத்து ஜனாதி பதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐ.தே.க.வின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜெயசூரிய, கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் ஆகிய நால் வரில் ஒருவரையே எதிர்க்கட்சிகளின் சார் பில் பொதுவேட்பாளராக நியமிப்பது என்று

தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சிகளின்

சார்பில் தெரிவுசெய்யப்படும் நால்வரில் ஒருவர் பொதுவேட்பாளராக போட்டியிடுவார். இது குறித்து மாதுலுவாவே சோபித தேரர் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கொழும்பில் மீண்டும் சந்தித்து பேசவுள்ளனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் மாநாடொன்றும் நடாத்தப்படவுள்ளது.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வது தொடர்­பிலும் அர­சாங்­கத்தின் ஆட்­சி­யினை வீழ்த்­து­வ­தற்­கான பொது எதி­ரணி ஒன்­றினை உரு­வாக்கும் முயற்­சியில் கோட்டை நாக விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியும் சமூக நீதிக்­கான மக்கள் இயக்­கத்தின் தலை­வ­ரு­மான மாது­லு­வாவே சோபித தேரர் கடந்த காலங்­களில் இருந்து சகல எதிர்த்­த­ரப்­பி­ன­ரு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வந்த நிலையில் நேற்றும் பிர­தான எதிர்க்­கட்­சி­களின் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

கோட்டை நாக விகா­ரையில் இந்தச் சந்திப்புகள் இடம்பெற் றுள்ளன. அதேபோல் முன்னாள் அர­சியல் பிர­மு­கர்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்­தை­களை மாது­லு­வாவே சோபித தேரர் மேற்­கொண்­டுள்ளார்.

பிர­தான எதிர்க்­கட்­சி­க­ளுடன் பேச்சு

குறிப்­பாக பிர­தான எதிர்க்­கட்­சி­யினை ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மைத்­துவ சபையின் தலைவர் கரு ஜய­சூ­ரிய உள்­ளிட்ட முக்­கிய கட்சி உறுப்­பி­னர்­களும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் உறுப்­பி­னர்­களும் ஜன­நா­யகக் கட்சி, ஜன­நா­யக மக்கள் முன்­னணி, சோஷ­லிசக் கட்சி உள்­ளிட்ட கட்­சிகள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் உட்­பட பிர­தான அமைப்­புக்­க­ளு­டனும் நேற்று மாது­லு­வாவே சோபித தேரர் சந்­திப்­பினை மேற்­கொண்­டார்.

சந்­தி­ரிக்­கா­வுடன் பேச்சு

இதே­வேளை முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா குமா­ர­துங்­க­வவையும் அவர் நேற்று சந்தித்து பேசியுள்ளார்.

கடந்த சில வாரங்­க­ளாக வெளி­நாட்டு விஜ­யத்­தினை மேற்­கொண்டு நேற்று முன்­தினம் நாடு திரும்­பிய சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க நேற்று காலை கோட்டை நாக விகா­ரையின் விகா­ர­தி­பதி மாது­லு­வாவே சோபித தேரர் சந்­தித்­துள்­ள­தோடு பொது நிகழ்ச்சி நிரலில் பொது எதி­ர­ணி­யொன்­றினை உரு­வாக்­கு­வது தொடர்­பிலும் இரு தரப்பும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளார்.

virakesarik>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :