ஹாசிப் யாஸீன்-
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அமைச்சு தேசிய ரீதியில் 'செழிப்பான இல்லம்' எனும் தொனிப் பொருளில் வீடுகளை புதுப்பிப்பதற்கு ரூபா 10 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக முதற் கட்டமாக திவிநெகும உதவி பெறும் குடும்பங்களுக்கு தலா 2500 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இன்று (18) இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச திவிநெகும உத்தியோகத்தர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திவிநெகும பயனாளிகளுக்கு இக்கொடுப்பனவுகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீத், கல்முனை மாநரக சபை பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.ஏ.பசீர், ஏ.ஆர்.அமீர்; உள்ளிட்ட திவிநெகும முகாமையாளர்கள், திவிநெகும உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிலுள்ள 2804 திவிநெகும உதவி பெறும் குடும்பங்களுக்கு சாய்ந்தமருது திவிநெகும சமுதாய அடிப்படை வங்கியினால் ரூபா 70 இலட்சம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment