முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ரவு ஜனாதிபதிக்கே என்­பது தவறு- ஹசன் அலி

டை­பெ­ற­வி­ருக்கும் ஜனா தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ரவு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கே என்ற தகவல் உண்­மைக்கு புறம்­பா­னது எனவும் அதனை முற்­றாக மறுப்­ப­தா­கவும் தெரி­வித்த காங்­கி­ரஸின் செய­லாளர் நாய­கமும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ரி.ஹசன்அலி, கல்­முனை கரை­யோர மாவட்டம் எனும் விவ­கா­ரத்தில் முஸ்லிம் பிர­தே­சங்­களின் பிர­தேச சபை­க­ளி­னது தீர்­மா­னங்­க­ளையும் பிரே­ரணை நிறை­வேற்­றல்­க­ளையும் புறந்­தள்­ளி­விட்டு செயற்­ப­ட­மு­டி­யாது என்றும் தேர்­த­லுக்கு முன்னர் மேற்­படி விடயம் தொடர்பில் தீர்க்­க­மான முடி­வொன்று கிடைக்­கப்­பெ­ற­வேண்டும் என்­பதில் உறு­தி­யான நிலைப்­பாடு காணப்­பட்டு வரு­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி தேர்­தலின் போது முஸ்லிம் காங்­கி­ரஸின் செயற்­பாடு எவ்­வாறு அமை­ய­வேண்டும் என்­பது குறித்து மாகாண , பிர­தேச மற்றும் நகர சபை­க­ளி­னது அனைத்து மு.கா. உறுப்­பி­னர்­க­ளி­னதும் கருத்­துக்கள் உள்­வாங்­கப்­பட்டு வரு­வ­தாக குறிப்­பிட்ட அவர் ஆத­ரவு தொடர்­பான தீர்­மா­னத்தை கட்­சியின் உயர் பீடமே மேற்­கொள்ளும் என்றும் கூறினார்.

ஜனா­தி­பதி தேர்­தலின் போது மு.காவின் ஆத­ரவு ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கே என்ற ரீதியில் வௌியா­கி­யுள்ள தக­வல்கள் தொட­ரபில் விளக்­க­ம­ளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஹஷன் அலி எம்.பி. மேலும் கூறு­கையில்,

நடை­பெ­ற­வி­ருக்கும் ஜனா­தி­பதி தேர்­தலில் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ரவு யாருக்கு என்ற ரீதியில் ஊட­கங்­க­ளிலும் இணைத்­த­ளங்­க­ளிலும் பல்­வேறு முரண்­பட்ட தக­வல்கள் வௌியா­கி­வ­ரு­கின்­றன. முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் கூறப்­ப­டாத மற்றும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத பல தக­வல்கள் மற்றும் வதந்­திகள் வௌியா­கி­வ­ரு­கின்­றமை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யா­த­தாக இருக்­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்­தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ரவு யாருக்­கா­ன­தாக அமை­ய­வேண்டும் என்­பது தொடர்பில் தற்­போது கட்­சியின் மாகாண பிர­தேச மற்றும் நகர சபை உறுப்­பி­னர்­களை அழைத்து அவர்­க­ளி­ட­மி­ருந்து கருத்­துக்­க­ளையும் அவர்­க­ளது நிலைப்­பா­டு­க­ளையும் மு.காவின் அர­சியல் பீடம் திரட்­டி­வ­ரு­கின்­றது.

மேலும் கல்­முனை கரை­யோர மாவட்டம் என்ற தனி அலகு தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தனது நிலைப்­பாட்டை பாரா­ளு­மன்­றத்­திலும் பாரா­ளு­மன்­றத்­திற்கு வௌியிலும் வௌிப்­ப­டுத்தி வரு­கின்­றது. அது­மட்­டு­மன்றி பொத்­துவில் அட்­டா­ளைச்­சேனை, இறக்­காமம், கல்­முனை மற்றும் நிந்­தவுர் உள்­ளிட்ட பிர­தேச சபை­களில் கூட கரை­யோர மாவட்டம் தொடர்­பான பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான நிலையில் மேற்­படி நிறை­வேற்­றப்­பட்­டுள்ள பிரே­ர­ணைகள் ஊடா­கன வற்­பு­றத்­தல்கள் மற்றும் நிலைப்­பா­டுகள் என்­ப­வற்றை முஸ்லிம் காங்­கி­ர­ஸினால் புறந்­தள்­ளி­வி­ட­மு­டி­யாது என்­பதை தௌிவாக கூற­வேண்டும். 

கரை­யோர மாவட்டம் என்ற விவ­காரம் தொடர்­பான நிலைப்­பாட்டை எந்த மாற்­றமும் இருக்­கப்­போ­வ­தில்லை. இந்த வகை­யி­லேயே தற்­போதும் மிக தீவி­ர­மான கலந்­து­ரை­யா­டல்கள் மற்றும் நிலைப்­பாடு அறி­தல்கள் என்­பன இடம்­பெற்று வரு­கின்­றன. 

ஆனால் ஜனா­தி­பதி தேர்­தலில் முஸ்லிம் காங்­கி­ரஸின் ஆத­ரவு யாருக்கு என்­பது தொடர்பில் இது­வ­ரை­யிலும் எந்­த­வொரு தீர்­மா­னமும் எட்­டப்­ப­ட­வில்லை என்­ப­தையும் கூறி­வைக்­கின்றோம். ஆதெ­போன்று எத்­த­கைய தீர­மா­ன­மொன்று எடுக்­கப்­ப­ட­வேண்டு­மென்­றாலும் அதனை கட்சியின் உயர்பீடமே உறுதிசெய்யும்.

கட்சியில் இருக்கும் உறுப்பினர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் கட்சி என்றரீதியில் சகலரும் கட்சிக்கு கட்டுப்பட்டவர்களே. ஆதலால் கட்சி எடுக்கும் தீரமானத்தை சகலரும் அங்கீகரிக்க கடமைபட்டுள்ளோம். இதில் எந்தவித மாற்றுக்கருத்துக்களும் இருக்கமுடியாது. ஏமது தீர்மானத்தை உயர்பீடமே இறுதிசெய்யும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :