அஸ்ரப் ஏ சமத்-
மாத்தறை- மகரகம அதிவேக பாதையில் தனது சுகபோக பஸ்சை செலுத்துவதற்கும் ரூட்பேமிட்டை பெறுவதற்கும் நாளாந்தம் நான் அரசியல்வாதிகளுக்கும், பாதாளகோஸ்டியினருக்கும் நான் கப்பம் வழங்க வேண்டியுள்ளது.
அத்துடன் எனது பஸ்சை மாத்தறை பஸ் நிலையத்தில் தரித்து நிற்பதற்கும் அங்குள்ள அரசியல் பாதாளகோஸ்டியினர் எனக்கு பிரச்சிணைகளை உண்டு பண்னுகின்றனர்.
பெண் பஸ் சாரதி மாத்தறையில் வாழ்பவர் எனும் லக்கிக்கா சகுந்தலா கேவகே கல்பகே வயது 33 2குழந்தைகளின் தாய். இன்று மாத்தறையில் நகரில் உள்ள சுனாமி சிக்ணல் உயர் கம்பத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றார். இந்தப் பெண் சாரதி;
எனது பிள்ளைகளையும் எனது குடும்பத்தையும் காப்பாற்றுவதற்கே ஆண்களைப் போண்று எனக்கும் பஸ் ரைவராக தொழில் செய்து வருகின்றேன். எனது பஸ்சில் அதிக பிரயாணிகள் ஏறுவதை பொறுக்க முடியாத அரசாங்கத்தின் அரசியல்வாதிகளும் மாத்தறையில் உள்ள ஆண் ரைவர்களும் பாதாள கோஸ்டி ஊடக எனது தொழிலுக்கு இடையூரு விளைவிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்;.
24 மணித்தியலாயங்களுக்குள் ;இந்தத் தொழிலை நான் விட்டுவிட்டு ஓடச் சொல்கின்றனர். எண்னை அச்சுருத்துகின்றனர். என இந்த பெண் தெரிவிக்கின்றார்.

0 comments :
Post a Comment