மருதமுனை பொது நூலகத்தில் பிரஜகைள் வள நிலையம் ஆரம்பம்





பி.எம்.எம்.ஏ.காதர்-

சியா மன்றத்தின் கொய்க்கா திட்டத்தின் கீழ் மருதமுனை பொது நூலகத்தில் பிரஜகைள் வள நிலையம் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு இன்று (23-10-2014) மருதமுனை பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை மாநகர முதல்வர் சட்ட முதுமானி நிசாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்; பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றஊப் ஹக்கீம் கலந்து கொண்டார்.

ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் இந்த நிகழ்வை நெறிப்படுத்தினார். பிரஜகைள் வள நிலையத்திற்கான புரஜெக்டர் உபகரணங்களையும் மற்றும் நூல்களையும் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, மருதமுனை பொது நூலகத்தின் நூலகர் திருமதி நஸ்லியா காசீம் உமர்கத்தா ஆகியோரிடம் அமைச்சர் ஹக்கீம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர,; கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் மஜீட்,மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.முஸ்தபா,எம்.எஸ்.உமர் அலி உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :