கல்வியமைச்சினால் அதிபர்கள், ஆசிரியர்களினால் ஆற்றப்படும் அளவிலா சேவையைக் கௌரவிப்பதற்காக வருடந்தோறும் நடாத்தப்படும் 'ஆசிரியர் பிரதீபா பிரபா' விருது வழங்கும் விழா இவ்வருடமும் ஒக்டோபர் 6 ஆந் திகதி நடாத்தப்பட்டது.இந்நிகழ்வில் க/உடப்பிட்டிய அல் ஹுஸ்னா மகா வித்தியாலய அதிபர் திரு ஆ.பு.நயிமுல்லாஹ் அவர்கள் சிறந்த அதிபருக்கான விருதினையும், அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியை செல்வி ஆ.பு.கு. நசீஹா அவர்கள் சகிறந்த ஆசிரியருக்கான விருதினையும் பெற்றுள்ளனர்.
2011 ஆம் ஆண்டில் இவ்விருதினை இப்பாடசாலையைச் சேர்ந்த திருமதி ஆ.ஆ.கு.பஸ்லியா மற்றும் நசீஹா ஆசிரிகைகள் பெற்றுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment