வரட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தண்ணீர் பவுசர்கள் கையளிப்பு- படங்கள்

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-

டக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் உட்பட வரட்சி மற்றும் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உதவ அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய அம்பாறை, அநுராதபுரம், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மொனராகலை, முல்லைத்தீவு பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த அரசாங்க அதிபர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை தண்ணீர் பவுசர்கள் கையளிக்கப்பட்டது.

இவற்றை கையளிக்கும் நிகழ்வு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கொழும்பு-7 சிலிடா நிறுவத்தில் நடைபெற்றது.

அமைச்சின் செயலாளர் திருமதி எஸ்.எம்.மொஹம்மட் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.




எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -