இளமையை தக்கவைக்க ஊசி மருந்து ஏற்றிய 47வயதுடைய பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

ளமையை தக்கவைப்பதற்காக ஊசி மருந்து ஏற்றிய பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் பம்பலபிட்டி விசாகா வீதியில் அமைந்துள்ள அழகுசாதன நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் பயிற்சி பெற்ற ஒருவரினால் நடத்தப்பட்டு வரும் குறித்த அழகுசாதன நிலையத்தில் தமது இளமையை தக்கவைத்துக் கொள்வதற்காக மருத்துவம் செய்து கொள்ள சென்ற 47 வயதுடைய பெண் மருத்துவர் ஒருவருக்கு ஊசி ஏற்றப்பட்டுள்ளது.

இதன்போது குறித்து ஊசி மருத்து காரணமாக பெண் மருத்துவர் மரணமானதாக பம்பலபிட்டி பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மரணமான பெண் மருத்துவர் பொரல்லை லேடி ரிஜ்வே மருத்துவமையில் பணியாற்றும் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
<DC>
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :