இச்சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் பம்பலபிட்டி விசாகா வீதியில் அமைந்துள்ள அழகுசாதன நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் பயிற்சி பெற்ற ஒருவரினால் நடத்தப்பட்டு வரும் குறித்த அழகுசாதன நிலையத்தில் தமது இளமையை தக்கவைத்துக் கொள்வதற்காக மருத்துவம் செய்து கொள்ள சென்ற 47 வயதுடைய பெண் மருத்துவர் ஒருவருக்கு ஊசி ஏற்றப்பட்டுள்ளது.
இதன்போது குறித்து ஊசி மருத்து காரணமாக பெண் மருத்துவர் மரணமானதாக பம்பலபிட்டி பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மரணமான பெண் மருத்துவர் பொரல்லை லேடி ரிஜ்வே மருத்துவமையில் பணியாற்றும் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
<DC>
0 comments :
Post a Comment