தமிழ்த் தலை­மை­களும் சிங்­களத் தலை­மை­களும் தமது அர­சியல் நிலைப்­பா­டு­களை மாற்­ற வேண்டிய தருணம் இது

ந்­தி­யாவும் சீனாவும் நல்ல நண்­பர்­க­ளா­கி­விட்­டன எனவே வாய்ப்பை நழு­வ­விட்­டு­வி­டாது தமிழ்த் தலை­மை­களும் சிங்­களத் தலை­மை­களும் தமது அர­சியல் நிலைப்­பா­டு­களை மாற்­றி­ய­மைத்து முக்­கி­ய­மான தீர்­மா­ன­மொன்றை மேற்­கொள்­வ­தற்­கான தக்­க­த­ருணம் இது­வாகும் என ஐ.நா.வுக்­கான இலங்­கையின் முன்னாள் நிரந்­தர வதி­வி­டப்­பி­ர­தி­நிதி தயான் ஜய­தி­லக்க தெரி­வித்­துள்ளார்.
அவ்­வா­றா­ன­தொரு செயற்­பாட்டின் மூலமே இந்­தி­யாவின் ஒத்­து­ழைப்­புடன் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்வை பெற­மு­டியும் என்­ப­துடன் உத்­தி­யோகப் பூர்­மற்ற முறையில் பார­தீய ஜனதாக் கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்து கருத்து வௌியிட்­டி­ருந்­தாலும் அவர்­க­ளது கருத்­துக்கள் ஏறக்­கு­றைய ஒரே நிலைப்­பாட்­டி­லேயே இருந்­தன. சிரேஷ்ட தலை­வர்­களுள் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணிய சுவா­மியைத் தவிர்த்து பார்த்­தாலும் ஏனை­ய­வர்கள் மத்­தியில் அதி­கா­ரத்­தி­லுள்ள அரசின் முக்­கிய தீர்­மா­னங்­க­ளையும் நகர்­வு­களில் அதிக செல்­வாக்குச் செலுத்­து­ப­வர்கள் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

சர்­வ­தேச கற் கைக­ளுக்­கான பண்­டா­ர­நா­யக்க நிலை­யத்தின் ஏற்­பாட்டில் பிராந்­தியம் மற்றும் உல­குக்கு பொருத்­தப்­பா­டான பிர­தமர் நரேந்­திர மோடியின் கீழான இந்­தியா எனும் தலைப்பில் விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்று் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தின் குழு­வ­றையில் இடம்­பெற்­றது. இந்தக் கலந்­து­ரை­யா­டலில் பார­தீய ஜனதாக் கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்­களில் ஒரு­வ­ரான சுப்­பி­ர­ம­ணிய சுவாமி, சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ளரும் அர­சியல் விமர்­ச­க­ரு­மான பேரா­சி­ரியர் மாதவ் நலபாட், முன்னாள் மத்­திய அமைச்சர் காலா­நிதி சுரேஷ் பிரபு ,பா.ஜ.கா.வின் தேசிய வௌியு­றவுக் கொள்கை ஏற்­பாட்­டாளர் கலா­நிதி, ஸ்வப்ன் தாஸ்­குப்தா, பா.ஜ.காவின் தேசிய செயற்­குழு உறுப்­பினர் கலா­நிதி.சேஷாத்ரி சாரி ஆகியோர் கலந்து கொண்டு இலங்கை இந்­திய உறவு, சார்க்­வ­லயம், 13ஆம் திருத்தம், அரசில் தீர்­வுக்­கான விட­யங்கள், மோடியின் எதிர்­கால திட்­டங்கள் உட்­பட முக்­கிய விடங்கள் தொடர்­பாக பல்­வேறு கருத்­துக்­களை வௌியிட்­டி­ருந்­தனர்.

அக்­க­ருத்­துக்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டலில் பங்­கேற்­றி­ருந்­த­வரும், அரசில் விமர்­ச­ன­கரும், ஐ.நாவுக்­கான முன்னாள் இலங்­கையின் நிரந்­தர வதி­வி­டப்­பி­ர­தி­நி­தி­யு­மான தயான் ஜய­தி­லக்க கருத்து வௌியி­டு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,

குறித்த கலந்­து­ரை­யா­டலில் பங்­கேற்­ப­தற்­காக வரு­கை­தந்­தி­ருந்த பார­தீய ஜன­தாக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் அர­சாங்க ரீதி­யான உத்­தி­யோக பூர்­வ­வி­ஜ­ய­மொன்றை மேற்­கொண்­டி­ருக்­க­வில்லை என்­பது உண்­மைதான். அதற்­காக அவர்­களின் கருத்­துக்­களை அப்­ப­டியே முழு­மை­யாக கருத்­தி­லெ­டுக்­காது விட்­டு­வி­ட­மு­டி­யாது. இதில் சுப்­பி­ர­ம­ணிய சுவா­மியின் கடு­மை­யான கருத்­துக்­களை தவிர்த்­துப்­பார்த்­தாலும் ஏனைய அனை­வரும் ஏறக்­கு­றைய ஒரே நிலைப்­பாட்­டி­லி­யேயே கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். மேலும் சேஷாத்­திரி, முன்னாள் மத்­திய அமைச்சர் காலா­நிதி சுரேஷ் பிரபு(சிவ­சேனா கட்சி, தேசிய வௌியு­றவுக் கொள்கை ஏற்­பாட்­டாளர் கலா­நிதி. ஸ்வப்ன் தாஸ்­குப்தா போன்­ற­வர்கள் தற்­போ­தைய அதி­கா­ரத்­தி­லி­ருக்கும் மத்­திய அரசில் மிக­மிகச் செல்­வாக்கு உள்­ள­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றனர் என்­பதை நாம் மறந்து விடக்­கூ­டாது.
 
நல்ல நண்­பர்கள்

பிரிக்ஸ் உறுப்பு நாடு­க­ளான பிரேசில், இந்­தியா, ரஷ்யா, சீனா, மற்றும் தென்­னா­பி­ரிக்கா உள்­ளிட்ட ஐந்து நாடுகள் இணைந்து பிரிக்ஸ் வங்­கியை அமைக்க முடி­வெ­டுத்­தன. இந்த ஐந்து நாடு­களும் இணைந்து 1000 கோடி டொலர் முத­லீட்டில் இந்த வங்­கியை தமது நாடு­களின் வளர்ச்­சிக்­காக உரு­வாக்­க­வுள்­ளன. இந்த வங்­கியின் தலை­மையம் சீனாவில் அமைந்­துள்­ளது. பூச்­சி­யத்­தி­லி­ருந்த இந்­தி­யாவின் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பும் மோடியின் முதற் செயற்­திட்­ட­மா­னது பிரிக்ஸ் வங்­கியால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. ஆகவே இதனை மைய­மாகக் கொண்டு ஆசி­யாவில் முக்­கிய பொரு­ள­தார நிலை­ய­மாக காணப்­படும் சீனா­வுடன் இந்­தியா சிறந்த நட்பை பேண முடிவு செய்­துள்­ளது. மேலும் ஆசிய நாடு­களின் மீதான உலக வங்­கியின் தலை­யீட்டை இந்­தி­யாவும் சீனாவும் இணைந்து குறைப்­ப­தையே இலக்­காக கொண்­டுள்­ளன. மேலும் இந்­தி­யாவில் பல்­வேறு திட்­டங்­களை நிறை­வேற்ற அடுத்த 3 ஆண்­டு­களில் ஒரு லட்­சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் வரை பிரிக்ஸ் வங்கி கடன் அளிக்­க­வுள்­ளது. இதனால் சீனா­வுக்கும் இந்­தி­யா­வுக்­கு­மான நட்பு மேலும் வலு­டை­வ­தற்­கான வாய்ப்­புக்­களே உள்­ளன.

மாற்றம் வேண்டும்

தமிழ்த்­த­லை­மை­களைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ்­நாடு, புலம்­பெயர் தமி­ழர்கள், அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா உள்­ளிட சர்­வ­தேச நாடு­க­ளையே அடி­யொற்றி தமது அர­சியல் நிலைப்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்த நிலை­மை­யா­னது தற்­போது மாற்­றப்­படு மிகவும் அவ­சி­ய­மா­கின்­றது. அதே­போன்று ஆட்­சியில் உள்­ளிட்ட சிங்­களத் தலை­மைகள் ரஷ்யா, சீனா உள்­ளிட்ட நாடு­களை முன்­னி­லைப்­ப­டுத்தி மேற்­குல நாடு­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை பகி­ரங்­க­மாக தெரி­வித்து வரு­கின்­றது. இவ்­வா­றான நிலை­மையும் மாற­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

இந்­தி­யாவின் புதிய மத்­திய அர­சா­னது அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா உள்­ளிட்ட மேற்­குல நாடு­களோ அல்­லது அமைப்­புக்­களோ இலங்கை விவ­கா­ரங்­களில் தலை­யீடு செய்­வதை முற்­று­மு­ழு­தாக எதிர்க்­கின்­றது. அதற்கு எப்­போ­துமே துணை­போ­கப்­போ­வ­தில்லை. எனவே தமிழ்த்­த­லை­மை­களும் சிங்­க­ளத்­த­லை­மை­களும் தமது அர­சியல் நிலைப்­பா­டு­களை மாற்­றி­ய­மைக்க வேண்­டி­ய­தொரு முக்­கிய தரு­மா­ணக இது காணப்­ப­டு­கின்­றது. இந்­தி­யாவைத் தாண்டி எவ்­வி­த­மான முடி­வு­க­ளையும் எடுக்­க­மு­டி­ய­தி­ருக்கும் தற்­போ­தைய நிலை­மையில், அவ்­வாறு மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி முழு­மை­யாக புது­டில்­லி­யுடன் நேர­டிப்­பேச்­சு­வார்த்­தைகள் குறித்து கலந்­து­ரை­யா­டு­வதன் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்வை எட்­டு­வ­தற்­கான வாய்­புக்கள் உள்­ளன. அவ்­வாறு இரு தரப்­பி­னரும் மாற்­ற­மொன்றை ஏற்­ப­டுத்தும் தீர்­மா­ன­மொன்றை எட்­டாத வரையில் இழு­ப­றி­யான நிலைமை தொடர்ந்து கொண்­டே­யி­ருக்கும்.

13ஆவது திருத்தம்

இங்கு வருகை தந்­திர முக்­கி­யஸ்­தர்கள் 13ஆவது திருத்தம் போது­மான அளவில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக வௌிவி­வ­கார அமைச்சு குறிப்­பிட்­டி­ருந்­தாக கூறி­யி­ருந்­தனர். அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் 13ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தி­விட்டோம். 13ஐ தாண்டிச் செல்­லப்­போ­கின்றோம், 13 நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது என்றே இந்­திய தரப்­பி­ன­ரிடம் தொடர்ச்­சி­யாக கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். அதே­நேரம் தமிழ்த்­தே­சியக் கூட்­மைப்­பினர் 13ஆவது திருத்­தத்தில் குறிப்­பி­டப்­பட்ட ஏற்­பா­டுகள் எவை­யுமே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்­லை­யென்றே தொடர்ச்­சி­யாக கூறி­வ­ரு­கின்­றனர். இதனை இந்­திய ஆட்­சி­யா­ளர்கள் கருத்­தி­லெ­டுக்க வேண்டும். அதே­நேரம் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இந்­திய தரப்­பி­னரின் மாறு­பட்ட கருத்­துக்­களும் முற்­றாக மாற்­ற­ம­டை­ய­வேண்டும்.

அவ்­வா­றி­ருக்­கையில் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக முதற்­கட்­ட­மாக 13ஆவது திருத்­தச்­சட்­டத்தை அர­சாங்கம் முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும். அதனை பகு­தி­யாக அமு­லாக்­குதல், ஏற்­பா­டு­களை மாற்­றி­ய­மைத்தல் போன்ற செயற்­பா­டு­களைக் களைந்து தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கு நம்­பிக்கை ஏற்­ப­டுத்தும் முக­மாக இரு தரப்­பி­னரும் நேர­டி­யாக மேசையில் அமர்ந்து ஐயப்­பா­டு­களை களையும் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­பது அவ­சி­ய­மாகும். இதன் மூலமே கூட்­ட­மைப்பின் ஐயப்­பா­டு­களைக் களைந்து 13ஆவது திருத்தம் தொடர்பில் அடுத்த கட்­டத்­திற்குச் செல்ல முடியும் என்­பதை புரிந்து கொள்­ள­வேண்டும்.

தொட­ர­மு­டி­யாது

அர­சாங்­க­மா­னது இந்­தி­யா­வுக்குச் செல்­லும்­போது ஒரு­வி­த­மான கருத்­தையும் பின்னர் வேறு­வி­த­மான செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. இதற்கு சீனா தனக்கு பக்­கத்­து­ணை­யாக இருக்­கின்­றது என்ற நம்­பிக்­கையே முக்­கிய கார­ண­மாக இருக்­கின்­றது. சீனா இலங்­கையில் பாரிய முத­லீ­டு­களைச் செய்து, இலங்­கையின் அபி­வி­ருத்­திக்கு பல கைகொ­டுப்­புக்­களைச் செய்­தாலும் தொடர்ந்தும் சீனாவின் பின்னால் மறைந்து கொண்டு போலி வாக்­கு­று­தி­களை அர­சாங்­கத்தால் வழங்க முடி­யாது. காரணம் இந்­தி­யாவும் சீனாவும் நண்­பர்­க­ளா­கி­விட்­டனர். அவ்­வா­றான நிலைமை தொடர்­வ­தனால் எமக்கே பின்­வி­ளை­வுகள் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதி­க­முள்­ளன. ஆகவே அதனைக் கவ­னத்தில் கொண்டு மாறு­பட்ட கருத்­துக்­களை வௌிப்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் செயற்­பாடு முழு­மை­யாக நிறுத்­தப்­ப­டு­வது சிறந்­த­வொரு செயற்­பா­டா­கவே இருக்கும்.

பொரு­ளா­தார வளச்­சியே இலக்கு

பொரு­ள­தார வளர்ச்­சி­யையே இலக்­காகக் கொண்­டள்ள புதிய இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடி வளர்ச்சிப் பணி­க­ளுக்­காக, உலக வங்கி, சர்­வ­தேச நிதி­யத்தை அணுகும் போது, வளரும் நாடு­க­ளுக்கு சில சிர­மங்கள் ஏற்­ப­டு­கின்­றன. அவை விதிக்கும் நிபந்­த­னைகள் ஆசிய மற்றும் சார்க் நாடு­க­ளுக்கு சுமை­யாக மாறு­வ­து­முண்டு. ஆகவே வளர்ந்து வரும் நாடுகள் ஐக்­கி­யத்­துடன் தமது பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பது அவ­சியம் என்­பதில் கண்ணும் கருத்துமாகவுள்ளார். மேலும், சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய, மூன்று நாடுகளின் மக்கள் தொகை, உலக நாடுகளின் மொத்த மக்கள் தொகையில், சரிபாதிக்கு அதிகம் என்பதால், இம்முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையும் உள்ளார். ஆகவே இலங்கை உட்பட சார்க் வலய நாடுகள் உள்ளிட்ட ஆசியாவின் அனைத்து நாடுகளினதும் உட்கட்டமைப்பு வளர்ச்சியையே பொருளாதாரத்தை இலக்காகக் கொண்ட மோடி தலைமையிலான அரசு விரும்புகின்றது.

வாய்ப்பை நழுவ விடக்கூடாது

இவ்வராறன கருகோள்களுடனும் இலக்குகளுடனும் இந்தியாவின் புதிய மத்திய அரசு செயற்பட்டு வருகின்ற நிலையல் தமிழ்த் தலைமைகளும், சிங்களத்தலைமைகளும் தாம் தொடர்ச்சியாக வாக்குவங்கிக்காக கடைப்பிடித்துவரும் அரசியல் நிலைப்பாடுகளிந்து வௌியே வரவேண்டும். அதுமட்டுமன்றி இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு நேரடியாக புதுடில்லுடன் தமது உறவுகளை மேம்படுத்துவது மட்டுமின்றி நிலைப்பாடுகளையும் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். அதற்குரிய சரியான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த வாய்ப்பை நழுவ விடாது தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதே அவசியமானதாகும். இதனை உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இருதரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :