அப்போது அய்யனார் கோயில் வளாகத்தில் ஒரு வாலிபர் நடமாடிக் கொண்டு இருப்பதை பார்த்தனர். அவரை பிடிக்க சென்ற போது, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மக்கள் விரட்டிச் சென்று அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
கோயில் வளாகத்தில் உள்ள 4 அடி உயர துர்காதேவி அம்மன் கல் சிலையை திருட வந்தவர் என்பதும் சிலையை பெயர்த்து எடுத்து தயாராக வைத்திருந்ததும் தெரிந்தது.
கோயில் வளாகத்தில் உள்ள 4 அடி உயர துர்காதேவி அம்மன் கல் சிலையை திருட வந்தவர் என்பதும் சிலையை பெயர்த்து எடுத்து தயாராக வைத்திருந்ததும் தெரிந்தது.
இதையடுத்து, சிலை திருட வந்த நபரை கோயில் வளாகத்தில் உள்ள மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர். இந்த தகவல் பரவியதும் கோயில் வளாகத்தில் மக்கள் திரண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மரத்தில் கட்டப்பட்டு இருந்த வாலிபரை மீட்டு அவரிடம் விசாரித்தனர். மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் முன்னுக்குபின் முரணமாக பேசுகிறார். உண்மையிலேயே அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர்தானா? மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிக்கிறாரா என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துர்காதேவி அம்மன் சிலையை திருட முயன்ற வாலிபரை மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

0 comments :
Post a Comment