நாட்டில் அனைத்து சமயங்களையும் பாதுகாக்கும் கடப்பாடு இருப்பதால் அரசு அது தொடர்பில் தீவிரமாக செயற்படும் நிலையில் மிக நீண்டகாலமாக நாட்டில் நிலவிய தேசிய ஒற்றுமை நல்லிணக்கம் என்பவற்றை தொடர்ச்சியாக கொண்டு செல்வது அனைத்துப் பிரஜைகளினதும் கடமை என ஜனாதிபதி தெரிவித்தார். அநுராதபும் மொஹிதீன் ஜும்மா முஸ்லிம் பள்ளிவாசலுக்கு நேற்று மாலை (24) விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
ஆதிதொட்டு நிலவும் கலாசார பிணைப்பை தொடர்ந்தும் கொண்டு செல்வது மிகவும் அவசியம். எமது நாட்டுக்கேயுரிய அனைத்து இன மக்களுக்கும் பொதுவான கலாசாரம் எம்மிடம் காணப்படுகிறது. வேறு நாட்டின் கலாசாரம் எமக்குத் தேவையில்லை. சகோதரத்துவத்துடன் எமது கலாசாரத்தையும் தனித்தன்மையையும் கொண்டு செல்ல நாம் கைகோர்க்க வேண்டும்.
கோரமான தீவிரவாதத்தினால் இருண்டிருந்த இறந்த காலத்தை நாம் மறந்துவிடக்கூடாது. அவற்றில் கிடைத்த அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கும் அனுபவிக்காமல் இருப்பதற்கு இன,மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் திஸ்ஸ கரல்லியத்த- எஸ்.எம்.சந்திரசேன- வடமத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கனே முதலமைச்சர் எம்.எம்.ரஞ்சித்- பிரதி அமைச்சர்களான டப்ளியூ.பீ. ஏக்கநாயக்க- வீரகுமார திஸாநாயக்க- பீ. முதுகுமார ஆகியோர் உடனிருந்தனர்
0 comments :
Post a Comment