அஸ்லம் எஸ்.மௌலானாகல்முனை பிரதான பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சட்ட விரோத கடை அறையொன்று கல்முனை மாநகர சபையினால் இன்று புதன்கிழமை மாலை உடைத்து அகற்றப்பட்டுள்ளது.
கல்முனை பிரதான பஸ் நிலைய கட்டிடத் தொகுதியின் மேல் மாடியில் மாநகர சபையின் அனுமதியின்றி கடந்த சில தினங்களுக்கு முன்னர் இக்கடையறை அமைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கல்முனை மாநகர சபைக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியின் உத்தரவின் பேரில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் கல்முனை மாநகர சபை வேலைப் பிரிவினரால் இந்த சட்ட விரோத கடையறை அகற்றப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment