மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து இம்மாதம் 7ம் திகதி சீனாவுக்கு புறப்பட்ட விமானம் வியட்நாம் நாட்டின் எல்லைக்குள் சென்ற போது மாயமானது.
விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அந்த விமானத்தின் நிலை குறித்து இதுநாள் வரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் விமானத்தை கடத்தியிருக்கலாம் என்றும், கஜகஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் பகுதியில் இருக்கக்கூடும் எனவும் கருதப்பட்டது.
30 ஆயிரம் அடியில் பறக்க வேண்டிய விமானம் ரேடார் சிக்னலிலிருந்து தப்பிக்க 5,000 அடி உயரத்தில் பறந்ததாக தகவல் வந்ததால், அநேகமாக இந்த விமானம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள மலைபாங்கான பகுதியில் தரையிறக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் விமானத்தை தாங்கள் கடத்தவில்லை என்றும், தங்களுக்கும் கடத்தல் விவகாரத்திற்கும் சம்மந்தமில்லை எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தங்கள் நாட்டு பயங்கரவாதிகள் இதில் சம்பந்தப்படவில்லை என்பதை சீனாவும் தெளிவுப்படுத்தியுள்ளது.
மேலும் விமானம் குறித்து மலேசியா சரியான தகவல்களை அளிக்காததால், பயணிகள் உறவினர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

0 comments :
Post a Comment